சனி, 4 ஏப்ரல், 2009

ஜலதோஷம் போக்கும் சரியான மருந்துகள்

நாம் மழையில் நனைந்தாலும், வெயிலில் காய்ந்தாலும் ஜலதோஷம் ஏற்படும். இதனால் பலருக்கு வேலை செய்ய கஷ்டமாக இருக்கும். ஆகவே ஜலதோஷம் ஏற்படும் போது கீழ்க்கண்ட மருந்துகளை உபயோகிங்கள். உங்களுக்காக இதோ சில . . .

  • வெள்ளைபூண்டு, வெற்றிலை காம்பு, வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து சாப்பிட கொடுக்க குழந்தைகளின் சளி தொல்லை நீங்கும்.
  • வேப்பிலை, ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி பிடரியில் பூசிக்கொண்டால் மூக்கில் நீர் வடிதல் நிற்கும்.
  • தூதுவளை செடியில் ரசம் வைத்து மதியம் சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.
  • முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வர மழை காலங்களில் சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.
  • பனங்கிழங்கு அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர ஜலதோஷம், காய்ச்சல், தலைவலி சரியாகும்.
  • கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு சரியாகும்.
  • ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயற்றில் சாப்பிட மார்புசளி குணமாகும்.
  • முள்ளங்கி சாறு சாப்பிட ஜலதோஷம், தலைவலி, இருமல் குணமாகும்.
  • கற்பூரவல்லி இலையை சூடாக்கி நெற்றியில் பற்று போட்டால் சளி உடனே குணமாகும்.
  • அதிமதுரம் பொடி ஒரு கிராம் காலை, மாலை சர்க்கரை சேர்த்து உண்ண சளி, இருமல், தொண்டைவலி, மலசிக்கல் குணமாகும்.

தமிழ் மருந்தை பயன்படுத்துவோம்! ஜலதோஷம் நீங்கி சந்தோசமாய் வாழ்வோம்!

மீண்டும் சந்திக்கிறேன்!

ஞாயிறு, 29 மார்ச், 2009

வாதநோய் போக்கும் வலிமையான மூலிகைகள்

வாதநோய் போக்க சில மருந்துகளை நமது முன்னோர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். சில பயனுள்ள டிப்ஸ் இதோ!

  • தினமும் காலை எழுந்து பல் துலக்கிய பின் இரண்டு பச்சை வெங்காயத்தை சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் பக்கவாத நோய் குணமாகும்.
  • குப்பைமேனி இலை சாறு எடுத்து தினமும் ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.
  • முடக்கத்தான் இலைகளை நறுக்கி அரிசி மாவுடன் கலந்து அடைசெய்து சாப்பிட வாதம், பிடிப்பு குணமாகும்.
  • புரச மரத்தின் புதிய கொழுந்து இலைகளை நன்றாக அரைத்து பாலுடன் கலந்து குடிக்க வாதநோய் உடனடியாக குணமாகும்.
  • பேய் துளசி - கழுதை தும்பை இலைகளை நிழலில் உலர்த்தி தூளாக்கி சலித்து வைத்து கொள்ளவும். இந்த தூளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பால் சேர்த்து குடித்து வர வாதநோய் குணமாகும்.
  • எட்டி மரப்பட்டை உரித்து உள் பட்டை எடுத்து காய வைத்து இடித்து சலித்து பொடியாக்கி கால் ஸ்பூன் சுடுநீரில் போட்டு குடித்து வர வாதநோய் சரியாகும்.
  • காக்கரட்டான் வேர், மூக்கிரட்டை வேர் சுத்தம் செய்து நறுக்கி 50 கிராம், நொச்சிஇலை 100 கிராம், சுக்கு 50 கிராம், ஒரு மிளகு, 25 சீரகம், 200 நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒரு சங்கு அளவு கொடுத்து வர இளம்பிள்ளை வாதம் குணமாகும்.
  • வாதநாராயணன் இலை, வேர், பட்டை போன்றவற்றை மைய அரைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு நீரில் சிறிது கலந்து குடித்து வர வாத நோய் குணமாகும்.
  • மாவிலங்க இலை சாருடன் சம அளவு தேங்காய் பால் சேர்த்து காய்ச்சி வெறும் வயற்றில் 100 மில்லி வரை குடித்து வர வாதவலி, வாதபிடிப்பு, கைகால்வலி நீங்கும்.
  • நொச்சி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளித்து வர வாதத்தால் ஏற்படும் உடல் வலி தீரும்.

மீண்டும் சந்திப்போம்!

புதன், 18 மார்ச், 2009

மூலம் போக்கும் முக்கிய மூலிகைகள்

மூலநோய் மிகவும் கொடுமையான நோய். மனிதர்களில் பலர் டிப் டாப்பாக இருப்பார்கள். ஆனால் பாவம் அவர்கள் மூலநோயால் அவதிப்படுவர். வெளியே தெரியாது. நடக்கவும், இருக்கவும், வேலை செய்யவும் அதிகம் அவதிபடுவார்கள்.
ஆகவே மூலநோயை ஒழிக்க சில டிப்ஸ் . . .
  • அகத்திகீரை எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை மாலை ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
  • வல்லாரை இலைகளை இட்லி சட்டியில் பசும்பால் விட்டு தட்டில் துணி மீது பரப்பி நன்றாக அவிந்தவுடன் நிழலில் உலர்த்தி, பொடி செய்து கொள்ளவும். பால், பனங்கற்கண்டு சேர்த்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர மலச்சிக்கல் வராது.
  • பப்பாளி பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி மூலத்தை குணப்படுத்தும்.
  • குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி நீரில் அலசி வெயிலில் காயவைத்து, பவுடராக்கி கொள்ளவும். பொடியை ஒரு சிட்டிகை பசு நெய்யுடன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும். தவறாமல் 48 நாட்கள் சாப்பிட்டு வர மூலம் பூண்டோடு அழிந்து விடும்.
  • அருகம்புல் வேர் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வர இரத்த மூலம் நீங்கும். மூலக்கடுப்பு உஸ்ணம் நீங்கும்.
  • கனிந்த வாழைபழம் , சீரகம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.
  • சுக்கு, மிளகு, கடுக்காய், பூண்டு, பிரண்டை, கற்றலை வேர், நீர்முள்ளி வேர் முதலியவற்றை சம அளவு எடுத்து அரைத்து புளித்த மோரில் குடித்து வர உள் மூலம் குணமாகும்.
  • காய்ந்த திராட்சை பழம் வாங்கி பசும்பாலில் ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து பழத்தை பிழிந்து அந்த சாறை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் மலசிக்கல் தீரும்.

தமிழ் மருந்து சாப்பிடுவோம் - மூலநோயை முடுக்குவோம் !

மீண்டும் சந்திக்கிறேன்!

செவ்வாய், 10 மார்ச், 2009

மேனி அழகு தரும் மேன்மையான மருந்துகள்

நமது மேனியின் அழகை கூட்ட இதோ சில பயனுள்ள டிப்ஸ்!
  • இரவு புல்லின் மெது மெல்லிய துணியை விரித்து அதிகாலையில் துணியை பிழிந்து முகத்தில் தடவி வர முகம் பளபளப்பாகும்.
  • கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயை கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வர தலை முடி அடர்த்தியாகவும் , கருமையாகவும் வளரும்.
  • வெள்ளைபூண்டையும் , துத்தி இலையையும் நறுக்கி நல்ல-எண்ணெயில் போட்டு காய்ச்சி தினமும் பருக்கள் மீது தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.
  • இரவில் படுக்க போகும் முன் தேன் , குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பு உண்டாகும்.
  • தினமும் படுக்கைக்கு செல்லும்போது செம்பருத்தி இலையை கூந்தலில் செருகி வைத்துக்கொள்ளவும். காலையில் இலையை எடுத்து விடவும். தொடர்ந்து செய்து வர பேன், பொடுகு அகலும்.
  • சுரக்காய் வாரம் இரு தடவை சாப்பிட்டு வர தொப்பை குறையும்.
  • வாழை தண்டு சாரு, அருகம்புல் சாரு இதில் ஒற்றை குடித்து வர உடல் பெருக்கம் குறைந்து, உடல் அழகு பெரும்.
  • முட்டைகோஸ் சாரு எடுத்து முகத்தில் தடவி வர முகசுருக்கம் மறையும். வறண்ட சருமம் மென்மையாகும்.
  • பப்பாளி பழம் மகித்து முகம், கழுத்து, கைகளில் பூசி அரை மணிநேரம் ஊறவைத்து பின்பு முகம் கழுவ முக அழகு கூடும்.
  • தாமரைப்பூ கசாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மாறிவிடும்.

அழகை கூட்டுவோம், அன்பை பெருக்குவோம், ஆனந்தமாய் வாழ்வோம்.

மீண்டும் சந்திக்கிறேன்!

ஞாயிறு, 1 மார்ச், 2009

வாழையின் பயன்கள்

முக்கனிகளில் ஒன்றான வாழையின் பயன்களை பற்றி இதில் பார்ப்போம்.
  • இரவு சாப்பற்றிக்கு பிறகு ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் பல் வலி, பல் ஈறு வீக்கம், பல்லில் இரத்த கசிவு போன்ற நோய்கள் வராது
  • பழுத்த வாழைப்பழத்தின் தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமலை ஒரு வாரத்தில் குணமாகும்.
  • தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வர தொற்று நோய் வராது.
  • பேயன் வாழை பழம் தோலுடன் வில்லையாக நறுக்கி பனக்கற்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்னையில் ஊறவைக்க வேண்டும். பாட்டிலை தினமும் வெயிலில் வைக்கவும். மூன்று நாட்கள் ஊறிய பின் தினமும் ஒரு வில்லை எண்ணையுடன் சாப்பிட மலச்சிக்கல் சரியாகும்.
  • நன்றாக பழுத்த நாட்டு வாழை பழம் ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
  • கற்பூர வாழைக்காய் தோல் உரிக்காமல் சிப்ஸ் போல் வெட்டி காய வைத்து, நன்றாக காய்ந்தவுடன் பவுடராக ரெடி பண்ண வேண்டும். ஏலக்காய் பொடி செய்து கொள்ள வேண்டும். வாழைக்காய் பவுடர் அரை கிலோ, பனக்கற்கண்டு இருபது கிராம், ஏலக்காய் பொடி பத்து கிராம் கலந்து வரும் பவுடரை அரை கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
  • வாழை தண்டு சாரு குடித்து வந்தால் உடல் பெருக்கம் குறையும், உடல் அழகு பெரும்.
  • வாழை தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்னையில் குழைத்து தடவினால் தீப்புண், சீழ் வடிதல் மற்றும் காயங்கள் குணமாகும்.
  • வாழை பட்டைஎய் தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து காதில் விட்டால் காது வலி குணமாகும்.
  • வாழை பூ பொரியல் செய்து சாப்பிடுவதினால் அஜிரணம், நீரழிவு நோய் குணமாகும்.

ஆகவே வாழை பழம் சாப்பிடுவோம் உடல் நலம் பேணுவோம்.

மீண்டும் சந்திக்கிறேன்!

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

மாம்பழம் அதன் பயன்கள்


மா, பலா, வாழை இவை மூன்றும் முக்கனிகள் என்பது நமக்கு தெரியும். முக்கனிகளின் பயன்கள் பல உள்ளது என நம்மில் பலருக்கு தெரியாது. இவற்றில்முதலில் நாம் மா பற்றி பார்ப்போம்.
  • தினமும் உணவில் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நோய் குணமாகும்.

  • தினமும் உணவில் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஊக்கத்துடன் பிறக்கும்

  • மாம்பழத்தில் வைட்டமின் எ சத்து உள்ளதால் நல்ல கண் ஒளிதருகிறது இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உண்பதால் இரத்தம் அழுத்தம் சீராகும்.

  • மாம்பழம் பப்பாளி இரண்டையும் வெட்டி தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலநோய் சரியாகும்.

  • மாமரத்தின் தளிர் இலை உலர்த்தி பொடியாக்கி ஒரு ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

  • மாவிலை பறித்து பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் உறுதியாகும்.

  • மாங்கொட்டை பருப்பை காயவைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து ஒரு நாள் இரண்டு வேளை கொடுக்க குடல் பூச்சி அகலும்.

  • மாவிலை பறித்து தணலில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டை கட்டு ,கமறல் குணமாகும்.

ஆகவே மாம்பழம் சாபிடுவோம் உடல் நலம் காப்போம்.




----- Click Here ----- Web-Stat web traffic analysis